தாய் போற்ற தான்-உயர
தரணியெங்கும் புகழ்-பரவ
கல்வியே தாரகமந்திரம்மென்று
கல்லூரி வாசலில்-நூழைந்தேன்
கல்வியில் மாகோலம் கொள்ள
தன்நிகர் இல்லாப்-புகழுக்கு
பள்ளிக்குப் போனோம்
துப்பாக்கி சப்தம் -கேட்டதடா
செல்வந்து விழுந்ததடா
பாதி வழியினிலே
குத்துயிராய்-குலயுயிராய்
அங்க அவயங்கள்-சிதற
வெள்ளை நிற சிறகினிலே
இரத்தக் கறை-படிந்ததடா,
மின்சாரம் இல்லையடா
மீண்டும் எழுந்து படிப்பதற்கு
மெழுகு வத்திதான்-எங்கள்
வாழ்க்கையின் உற்ற-தோழனடா
மெழுகுவத்தி கண்ணீரை-விட்டு
ஒளிக்கீற்றை பிரகாசிக்கும்
உருகும் கண்ணீர் துளிகளை
உன்றாக சேர்த்து-மீண்டும்
ஒரு மெழுகுவத்தி,செய்திடுவோம்
பள்ளிக்கு வருவது-என்றால்
நான்கு(04)மயில் தூரம்
குறு மணல் வீதியில்
கால் பாதங்கள் வலிக்க
உப்பள வியர்வை சிந்த
உள்ளம் கால்களை குறுமணல்-பதம்பார்க்க
கல்லூரி சேர்ந்தவுடன்-சற்று
ஒரு தடவை உள்ளம் காலைப் -பார்த்தாள்
இரத்தம் சொட்டு சொட்டாக-கசிந்துவரும்
இத்தனை தடைகளையும்
கடக்க முடியாமல்
மடிந்த உறவுகள் -எத்தனை
இத்தனை தடைகளையும்-தாண்டி
கல்வியைப்பயின்ற-மாணவன்
வரிசையில் நானும்
ஒருதானாய் இருக்கிறேன்
கல்லூரி வாழ்க்கையில்-அப்போதும்
அவலங்களை நாம்-சுமந்தோம்
இப்போ எம் பிஞ்சு உள்ளங்கள்
சுமக்குது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பல பல தடைகளையும் தாண்டி திடமாக நிமிர்ந்து நிற்கும் உங்களைப் பார்த்து பெருமைப் படுகிறேன் ரூபன்.
ஆண்டவன் உங்களை காக்கட்டும்.
வணக்கம்
அம்மா
உங்களின் வருகையும் கருத்தும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா நாங்கள் கலலூரியில் படிக்கும் போது சுமந்த சுமைகளை ஒருகனம் சீர்தூக்கிப் பார்தால் எங்கள் கண்களில் கண்ணீர் மட்டும்மல்ல உடல் அவயங்களில் உள்ள நாள நாடிகள் துடிதுடிக்கும் உணர்வுகள் புதுயுகம் படைக்கும் என்ற சிந்தனை எழும் மனதில்
உங்களின் அன்பும் ஆசீர்வாதமும் என்றும் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன் அம்மா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இத்தனை தடைகளையும்-இத்தனை தடைகளையும் தாண்டி
கல்வியைப்பயின்ற-மாணவன்
வரிசையில் நானும்..
தடை தாண்டி பெற்ற அருமையான செல்வம் கல்வி தங்களை பெருமைப்படுத்தட்டும் ..
வணக்கம்
இராஜராஜேஸ்வரி(அம்மா)
பல தடைகள் தாண்டிய படிக்கற்கள்தான் எம் தேசத்து மாணவர்கள் நித்தம் நித்தம் வறுமைச்சுமையும் அவல வாழ்வையும் நித்தம் நித்தம் மார்பில் சுமந்தவாறு வாழ்கிறார்கள் கல்லூரி வாழ்க்கையில் பல அவலங்களை சுமந்தோம் படிப்பதற்கு என்றால் பல ஒலிகளைகாதில் வேண்டிக்கொண்டு அதுமட்டுமா குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மண்ணெண்னை விளக்கு ஒளிரவிட்டு மெழுகு வார்தியின் ஒளியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(கல்லூரி வாழ்க்கையில் சுமந்தஅவலங்கள்)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-