பேனாவின் நரம்பு-வளிஓடும்.
உதிரத்தில் உலக சரித்திரத்தை
புரட்டிப் போட்டவனும்
பேனா முனைப் போராளிதான்
எங்கோ எங்கோ ஆணவம் தலை விரித்து-ஆடுதோ.
அங்கே எல்லாம்
முதற்ப்புள்ளியும் முற்றுப்புள்ளியும்
வைப்பவன் பேனாமுனைப் போராளிதான்
பேனா சிறிய விலை என்றாலும்
அதன் நூனியில் இருந்து -வடியும்
கண்ணீர் மிக வலிமை படைத்த -சக்தி
உலக சரித்திரத்தையோ-சொல்லிவிடும்
ஆயுத முனையில் யுத்தம்-செய்யும்
எதிரியை விட
பேனா முனையில் எழுதி
யுத்தம் செய்யும் ஒரு எழுத்தாளன்
உலக அரங்கில் வெற்றி வாகை சூடுவான்
ஆயுதத்தாள் யுத்தம் செய்வதை- விட
பேனா முனையில் யுத்தம் செய்பவன்
மிக வலிமை படைத்தவன்
பேனா முனையில் யுத்தம்-செய்பவன்
நீதி நியாயம்.தர்மம் எல்லாம்
பக்கச் சார்பற்று நடு நிலை காப்பவன்
எரிகின்ற தீப்பிளம்புக்கு-மத்தியில்
தன் உயிரே துச்சமென -பாராமல்
அர்ப்பணம் செய்பவன்
நாட்டு மக்களுக்கு-சுதந்திர
தாகத்தை இதமாக -சுவாசிக்க
பெற்றுக் கொடுப்பவனும்
பேனா முனைப் போராளிதான்
எங்கோ எங்கோ மனித குலத்துக்கு
எதீராக அடக்கு முறைகளும்
இன அழிப்புக்களும்-மேல் ஓங்கி நிக்குதோ
ஒரு இனத்தை ஒருஇனம்
எங்கே ஒடுக்குகின்றார்கலோ
அங்கல்லாம் பேனா முனைப்
போராளியின்-குரல்
சர்வதேச அரங்கெல்லாம்
கம்பீரமாக ஓங்கி ஒலிக்கும்
சிலநேரம் அணுகுண்டு-வெடித்து
சில எல்லைகளைத் தான்-அழிக்கும்
ஆனால் பேனா முனைப் போராளி
எடுக்கும் அணுகுண்டு(பேனா)
அது உலகெங்கும் அதிர்வுகளை
உணர வைக்கும்-அந்த
நிஜமான அணுகுண்டை-விட
பல மிக்க —சக்தி
பேனாமுனைப் போராளிக்கே-அதிகம்
ஒரு நாட்டின் எல்லைப் புறத்தில்
யுத்தம் செய்யும்-வீரர்கள்
பல இழப்புக்களை
உதிரம் சிந்தித்தான்
நாட்டு எல்லையை மீட்க வேண்டும்
ஆனால் பேனாமுனைப் போராளி
உதிரம் சிந்தாமலும் வியர்வை சிந்தாமலும்
பேனா முனையில் எழுத்து வடிவில்
புரட்சி செய்து நியாயத்தை-பெற்று தருகின்றவன்.
அவன்தான் போனாமுனைப் போராளி.
யுத்தம் செய்யும்வீரனின்-பலம் ஒரு மடங்கு என்றால்
பேனா முனைப் போராளியின்
பலம்பல -மடங்கு என்று பொருள்படும்
எத்தனையோ பேனா முனைப்-போராளிகள்
தன் தாய் நாட்டுக்காகவும்
தன் சமுதாயத்துக்காகவும்
அன்றும் இன்றும் உயிரை-தியாகம் செய்தார்கள்
அவர்களை இன்று இருக்கின்ற
எம் சமுதாய உறவுகள்
தினம் தினம் பூசிப்போம்……………
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சரத்தில் மீண்டும் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துக்கள், ரூபன்!
வணக்கம்
ரஞ்ஜனியம்மா
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றியம்மா எல்லாம் பார்க்கப் போனால் நான்தான் அம்மா உங்களுக்கு நன்றி கடன்பட்டவன் ஏன் என்றால் நீங்கள்தான் என்னை அறிமுகப்படுத்தினிங்கள் எல்லா உங்களுக்கே சாரும் அம்மா உங்களின் வாழ்துக்களும் பாரட்டுக்களும் என்னை ஒருபடி மகிழ்விக்கும்
உங்களின் நல்ல மனசு ,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான கவிதை…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9356.html) சென்று பார்க்கவும்… நன்றி…
வணக்கம்,
தனபால் அண்ணா உங்கள் கருத்துக்கும் இதை வலைச்சரம் கதம்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் என்பதை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து பல இன்னல்களுக்கு மத்தியி்ல்
(பேனா முனைப் போராளி)என்ற கவிதையை படைத்துள்ளேன் படித்தபின் அனைவருக்கும் பயன் உள்ளவாறு உங்கள் பின்னூட்டங்களை (உங்கள் கருத்தை)மறக்காமல் இடுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-