ஒரு நாடு சுதந்திரமடைந்து விட்டால்.
அந்த நாட்டு மக்களும் சுதந்திரமடைய வேண்டும்
ஆனால் நாடுதான் சுதந்திரமடைந்திருக்கு.
ஆனால் நாட்டு மக்கள் சுதந்திரமடைய வில்லை.
பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும்.
பரம்பரை பரம்பரையாக-சதா.
வாழ்வில் சுமையான துன்பச் சிலுவையை.
சுமந்து வாழ வேண்டியவர்களாக ஆக்கி விட்டான்.
வறுமை என்ற துன்பச் சிலுவையை.
நம் வாழ்வில் இருந்து இறக்கும்
பொழுது எப்போது விடியும்
பொழுது எப்போது விடியும்-நம் வாழ்வு.
வறுமையின் கொடுமையின்.
விழிம்பில் நின்று வாழ்கையை
வாழ வேண்டியவர்களாக
எம்மை ஆக்கி விட்டான் -இறைவன்.
நாட்டு மக்களை ஆளும்மன்னனுக்குத்தான்
கண்ணில்லை என்றால்.
எம்மை படைத்த இறைவனுக்கும் கண்ணில்லையா?????
ஒவ்வெரு வீட்டுத் தலைவனும் .
எப்போதுதான் நம் வாழ்வு விடியும்.
என்ற மனச் சிதறல் ஓடு.
இரவும் பகலும் சுமையை தூக்கி.
எம் உறவுகளின் -முதுகு.
வில் போன்று வளைந்திருக்கு.
இந்த சதா துன்பமான கொடுமையின்.
வாழ்வில் இருந்து மீலும் பொழுது
எப்போது விடியும்-வாழ்வு.
எப்போது விடியும்-வாழ்வு
பிள்ளையைப் பெற்றால்-கண்ணீரு.
தென்னையை நட்டால்-இளநீரு.
என்ற பாடல் வரியை சற்று –செவி சாய்த்தால்.
உலகெங்கும் வாழும் மனிதர்களின் வாழ்வில்
கண்ணீரும் சென்ணீரும் சிந்தும்-வாழ்வாகவும்.
வாழ்வில் இருள் சூழ்ந்த வாழ்வாகவும்.
சமூதாயத்தில் ஒதுக்கப் பட்டு விட்டோம்-என்ற.
சிந்தனை நோக்குடனும்.
இந்த அவச் சொல்லில் இருந்து மீலும் பொழுது.
எப்போது மலரும்.எப்போது மலரும்.
எப்போது விடியும்-வாழ்வு. எப்போது விடியும்-வாழ்வு..
என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றான் மனிதன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் உறவுகலே.
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சிசெய்து (எப்போது விடியும் எம் வாழ்வு)என்ற தலைப்பில் எழுதப்பட்டுஉள்ள கவியைபடித்து மறக்காமல் பின்னூட்டம் கொடுக்கவும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-