பெற்றவளின் ஓர் அழுகை
தீபம் ஏற்றும் நாளில்
தீராத துயரங்கள்-வந்து
என்மனதை வதைக்குது-மகனே
கல்லறை மேனி தழுவிய-உன்னை
காணத் துடிக்குது என்கண்கள்
அரும்பு மீசை வளரும்-போது
துள்ளித் திரிந்த பருவங்களும்
பிள்ளைச் செல்வங்களை-கண்டால்
உன்நினைவுதான் ஓடி வருகிறது-மகனே!
கல்லறை மேனி தழுவிய-என்மகனே!
கண்விழித்து கல்லறை-திறந்து வா…..மகனே!
பஞ்சடைத்த என்னுள்ளம்
நெஞ்சடைத்து போகுதோ….
உன் அம்மாவின் கூக்குரல்
விண்னுக்கு கேட்கிறதா மகனே!
யார் கண்ணு பட்டதென்று-தெரியவில்லை
உன் வாலிபப் பருவத்தில் கண்மூடினாய்-மகனே!
கல்லறை மேனி தழுவிய-என்மகனே!
கண்விழித்து கல்லறை-திறந்து வா…..மகனே!
உன் கல்லறையில் இருந்து-நான்
ஆணையிட்டு சொல்லுகிறேன்-மகனே
வரலாற்றை ஒருபோதும்-எம்மினம் மறக்காது
துன்பங்களை சுமந்தவன்
துயரங்களை எப்போதும்-நன்கறிவான்
உன் வித்துடல் சங்கமித்த-மண்ணில்
புதிய வரலாறு உருவாகும்
பாரில் உள்ள மாந்தர்கள்-அதை
பொறுத்திருந்து பார்ப்பார்கள்
என் விழி ஓரம் நீ்ர்சிந்த-விதி ஒன்று
இறைவன் எழுதிவிட்டானா?? –மகனே.
கல்லறை மேனி தழுவிய-என்மகனே!
கண்விழித்து கல்லறை-திறந்து வா…..மகனே!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
maha
பஞ்சடைத்த என்னுள்ளம்
நெஞ்சடைத்து போகுதோ….
உன் அம்மாவின் கூக்குரல்
விண்னுக்கு கேட்கிறதா மகனே!//
மகனை பிரிந்த தாயின் கதறல் மனதை பிழிகிறது.
இந்த நிலை எந்த தாயுக்கும் இனி வரக்கூடாது என்று கடவுளை வேண்டச்சொல்கிறது.
வணக்கம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உணர்வுப்பூர்வமான அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கல்லறை மேனி தழுவிய-என்மகனே!
கண்விழித்து கல்லறை-திறந்து வா…..மகனே!//ஒரு தாயின் ஏக்கம் நியாயம்தானே?
வணக்கம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை ரொம்ப நல்லா இருக்கு ரூபன்…
வாழ்த்துக்கள்.
வணக்கம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல கவிதை
வணக்கம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒருதாயின் பாசப்பிணைப்போடு, தேசப்பிணைப்பினையும் சேர்த்தே ஒலிக்கிறது சோகம்.
என் அம்மாவின் புத்திரசோகம் கண்முன் ஓடி மறைந்தது.
ஓலங்கள் கூட உணர்ச்சிப் பிழம்பாய் கண்முன் நிற்கிரது.
பனிக்கும் கண்கள்தான் இதன் பின்னூட்டம். நன்றி ரூபன்
வணக்கம்
அம்மா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பெற்றவளின் ஓர் அழுகை
உற்றவர், ஊரவர்
உள்ளம் நோக வைக்கும்…
உண்மையில்
பெற்றவளின் உள்ளம்
எத்தனை துன்புறும்…
சிறந்த பதிவு
வணக்கம்
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை உருக்கம!
ஊருக்கு போன மகனையே
பிரிய முடியாத தாய்மை
ஒரே அடியாய் பிரிவதென்றால்
இதயம் கனக்கிறது
வணக்கம்
தங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஊனுயிர் ஈந்த உணர்வோடு தாயவள்
தானுயிர் தாங்கிடுமோ சொல்!
மனதை உருக்கிடும் வலிமிக்க கவிவரிகள் சகோ!..
தாளமுடியாத் துயரம் தாங்குமோ இன்னும்…
வணக்கம்
சகோதரி
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகனை இழந்த தாயின் வருத்தம் தோய்ந்த கவிதை. கண்கலங்க வைக்கிறது. ரூபன்
வணக்கம்
முரளி(அண்ணா)
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோதரரே…
மிகவும் அருமையான கவிதை…
வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரா,
ஒரு அம்மாவின் மனதை
அவளின் மீள முடியா துயரத்தை வார்த்தைகளால்
சொல்ல முடிந்த உங்களால் பிற்காலத்தில்
தந்தைக்கு தந்தையாய் தாய்க்கு தாயாய்
தாயுமானவராய் இருப்பீர்கள் என்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை!!
வணக்கம்
சகோதரி
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அம்மாவின் ஆழ்துயர்க் குரல்
விண்ணுக்கு ஏகுவதுடன்
உள்ளத்தின் ஆழத்திற்குள்ளும்
கசிந்து உருக்குகிறது
வணக்கம்
ஐயா
என்ன ஐயா செய்வது.. பெற்றவள் பெற்றவனை இழக்கும் போதுதான் அவள் விடும் துயரங்கள் எவ்வளவு…வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாகஉள்ளது ..நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தீபம் ஏற்றும் நாளில்
தீராத துயரங்கள்
பஞ்சடைத்த என்னுள்ளம்
நெஞ்சடைத்து போகுதே ….
இந்த வரிகள் வலிக்கத் தான் வைக்கிறது. ரசித்தேன்.
பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்.
மண்ணின் மைந்தர்கள் என்றும்
நம் கண்ணில் கரைந்திடுவர்
மனதோடு வாழ்ந்திடுவர்.
வணக்கம்
சகோதரி
தங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது…
ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை இல்லாமல் போகும் போதுதான் அதன் தாக்கம் தெரியவரும் நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Mothers dream will become a reality oneday
வணக்கம்
ஐயா
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு சகோதரருக்கு வணக்கம்…
தாயின் வேதனையும், கண்ணீரையும் என் கண்களை நனைத்தது. அற்புதமாக உணர்வுகளை கவியாய் வடித்த விதம் கவர்கிறது சகோதரர். நிச்சயம் தாயின் மனம் அறிந்து நன்மகனாய் நீங்கள் இருப்பீர்கள் என்பது தங்கள் எண்ணங்களில் பளிச்சிடுகிறது. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே..
வணக்கம்
சகோதரன்
ஒரு தாய் தான் பெற்ற பிள்ளையை இழக்கும் போது… எவ்வளவு மனவேதனைப்படுவாள்…. என்பதை நன்கு உணர்ந்துளீர்கள். தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி சகோதரன்….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் கனத்துப் போனது.
வணக்கம்
சகோதரி
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்னே அருமையான கவிதை!!!! தாயுள்ளத்தின் வேதனையும், கண்ணீரும் மனதை உலுக்கியது! இது போன்று, எத்தனை தாய்களின் கண்ணீர் தமிழ் பூமியை நனைக்கிறதோ?! உங்கள் எழுத்துக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!!
வணக்கம்
தங்களின் வருகையும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி…
முதல் வருகை என்று அல்லாமல் தொடர் வருகையாக இருங்கள்……நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
”…அரும்பு மீசை வளரும்-போது
துள்ளித் திரிந்த பருவங்களும்
பிள்ளைச் செல்வங்களை-கண்டால்
உன்நினைவுதான் ஓடி வருகிறது-மகனே!…”
Vetha.Elangathilakam.
வணக்கம்
சகோதரி
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான ஒப்பாரி….. மனதை பிழிகிறது…
வணக்கம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வரலாற்றை ஒருபோதும்-எம்மினம் மறக்காது
துன்பங்களை சுமந்தவன்
துயரங்களை எப்போதும்-நன்கறிவான்
உன் வித்துடல் சங்கமித்த-மண்ணில்
புதிய வரலாறு உருவாகும்
நம்பிக்கை விதைக்கும் வரிகள்..!
வணக்கம்
அம்மா
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
அம்மா
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்ணீர் வரவழைக்கும் பதிவு..நன்று தோழர்..
வணக்கம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதை கலங்க வைத்தது தம்பி…
வணக்கம்
அண்ணா
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தாயின் கண்ணீர் வலியது… நெஞ்சைக் கணக்க வைக்கும் வரிகள்…
வணக்கம்
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உறவாக அழுகையிலும்
உணர்வாக எழுகின்றது
உங்கள் ஈகம்
வணக்கத்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(பெற்றவளின் ஓர் அழுகை)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-