தீபம் ஏற்றும் நாளில்
தீராத துயரங்கள்-வந்து
என்மனதை வதைக்குது-மகனே
கல்லறை மேனி தழுவிய-உன்னை
காணத் துடிக்குது என்கண்கள்
அரும்பு மீசை வளரும்-போது
துள்ளித் திரிந்த பருவங்களும்
பிள்ளைச் செல்வங்களை-கண்டால்
உன்நினைவுதான் ஓடி வருகிறது-மகனே!
கல்லறை மேனி தழுவிய-என்மகனே!
கண்விழித்து கல்லறை-திறந்து வா…..மகனே!
பஞ்சடைத்த என்னுள்ளம்
நெஞ்சடைத்து போகுதோ….
உன் அம்மாவின் கூக்குரல்
விண்னுக்கு கேட்கிறதா மகனே!
யார் கண்ணு பட்டதென்று-தெரியவில்லை
உன் வாலிபப் பருவத்தில் கண்மூடினாய்-மகனே!
கல்லறை மேனி தழுவிய-என்மகனே!
கண்விழித்து கல்லறை-திறந்து வா…..மகனே!
உன் கல்லறையில் இருந்து-நான்
ஆணையிட்டு சொல்லுகிறேன்-மகனே
வரலாற்றை ஒருபோதும்-எம்மினம் மறக்காது
துன்பங்களை சுமந்தவன்
துயரங்களை எப்போதும்-நன்கறிவான்
உன் வித்துடல் சங்கமித்த-மண்ணில்
புதிய வரலாறு உருவாகும்
பாரில் உள்ள மாந்தர்கள்-அதை
பொறுத்திருந்து பார்ப்பார்கள்
என் விழி ஓரம் நீ்ர்சிந்த-விதி ஒன்று
இறைவன் எழுதிவிட்டானா?? –மகனே.
கல்லறை மேனி தழுவிய-என்மகனே!
கண்விழித்து கல்லறை-திறந்து வா…..மகனே!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-