முகவரி அறியாத உறவு
முழு நிலவு போல் வந்தது.
உன் முகவரி அறியாத உறவு
என் முகநூலில்-வந்தது.
எனக்காக நீ முகநூலில்
எழுதும் கவிவரிகள்
முகவரி அறியாத உன்
முகத்தை பார்க்க வைத்தது.
உன்முகவரி என்ன என்று
உன்னிடம் கேட்டேன்.
என் முகநூலில் சொல்லிவிட்டாய்
இரவும் பகலும் உறக்கத்தில்.
உன் முகவரி-என்
கண்ணுக்குள் ஓடிக் கொண்டிருக்கும்
நான் உன்மீதும் -நீ என் மீதும்
காதல் என்னும் நட்பை வளர்த்தோம்
உன் முகவரியை எடுத்து-நான்
ஊர் எங்கும் தேடிப்பார்த்தேன்.
உன் முகவரி எனக்கு கிடைக்கவில்லை.
அப்போதுதான்-நான் அறிந்தேன்
நீ தந்த முகவரி-பொய் என்று
பிரபஞ்சத்தில்-வாழும் எம்பாச உறவுகளே.
முகவரி தொரியாமல் காதலிப்பதை-விட
முகவரி அறிந்து காதலிப்பது-சிறந்தது.
என்று.அன்றுதான் உணர்ந்து-கொண்டேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புள்ள ரூபன்,
உங்களது இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இணைப்பு:http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html
வருகை தருக!
நன்றி!
வணக்கம் (ரஞ்ஜனி)அம்மா
என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றியம்மா.இப்படிப்பட்ட இளம் படைப்பாளிகளின் படைப்புக்கள் வலைப்பூ வலைச்சரத்தில் வருவதை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பார்க்காமலே காதலிப்பது, கடிதத்தில் காதலிப்பது இதெல்லாம் திரைப்படங்களில் தான்!
நிஜ வாழ்க்கைக்கு முகவரி மிகவும் அவசியம்.
நன்றாக உணர்ச்சிகளிச் சொல்லியிருக்கிறீர்கள்.
வணக்கம்
Ranjani
எனது இணையப்பக்கம் உலாவந்து என் படைப்புக்குபின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி….
அனைத்தும் சரிசெய்து இடப்பட்டுள்ளது….குறைகளையும் நிறைகளையும் தொகுத்து கூறியமைக்கும்.
மிக்க நன்றிகள் உங்களைப் போன்றோர்களின் கருத்துக்கள் என் படைப்புக்கு மேலும் மெருகூட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
(முகவரி அறிந்து காதல் செய்) என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதைக்கு பின்னூட்டம் இட்டு அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்குக.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-