வணக்கம் நண்பர்களே… இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்… வாருங்கள்… வாருங்கள்…
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தை தாய்வீடாக கொண்ட எனது இனிய நண்பர் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்கள் இந்தப் போட்டியை நடத்த வேண்டும் என்று ஒரு மாதமாக மலேசியாவிலிருந்து தொடர்பு கொண்டு பல முறை பேசினார்… பதிவர் திருவிழா முடிந்தவுடன் ஆரம்பித்து விட்டோம் :
போட்டிக்கான தலைப்பு
1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி
போட்டியின் விமுறைகள் :
1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.
2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. கவிதையினை தங்கள் பதிவில் 31/10/2013 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com& amp; dindiguldhanabalan@yahoo.com
நடுவர்கள் :
திரு. ரமணி ஐயா அவர்கள் (yaathoramani.blogspot.in)
திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் (ranjaninarayanan.wordpress.com)
திருமதி.தென்றல் சசிகலா அவர்கள்(veesuthendral.blogspot.in)
திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்கள் (2008rupan.wordpress.com)
நாம் சிரித்தால் தீபாவளி தலைப்பில் ஒரு பள்ளிக் குழந்தையின் கவிதை :
ஒளியின் நாளாம் தீபாவளித் திருநாளில் பட்டாசின் ஒலி எதற்கு ?
பண்பாடு மிக்க தமிழகத்தில் பட்டாசின் சப்தம் எதற்கு ?
பாதுகாக்கும் ஓசோனில் பாதிப்பைப் பதிய வைக்கும் பட்டாசு எதற்கு ?
பிஞ்சுக் குழந்தைகளின் கையில் வடுக்களை வழங்கும் வெடி எதற்கு ?
தூய்மையான காற்றிற்கு துன்பத்தை உருவாக்கும் பட்டாசு எதற்கு ?
உயிர் தேசத்தை ஏற்படுத்தும் உபயோகமில்லாத பட்டாசு எதற்கு ?
உன்னதமான திருநாளை உருக்குலைக்கும் பட்டாசு எதற்கு ?
கவலையற்ற திருநாளில் காசை வீணாக்கும் பட்டாசு எதற்கு ?
நேசமுள்ள திருநாளில் நோயைப் பரப்பும் பட்டாசு எதற்கு ?
உன்னதத்தை உடைத்தெறியும் உணர்வற்ற பட்டாசு எதற்கு ?
பாரதத் திருநாட்டில் பாதிப்பை உண்டாக்கும் பட்டாசு எதற்கு ?
வசந்தமிகு தீபாவளியில் வன்முறையை வளர்க்கும் பட்டாசு எதற்கு ?
திருந்துவோம் ! திருத்துவோம் ! உணர்வோம் ! உணர்த்துவோம் !
சிரிப்பே மத்தாப்பு – அதுவே தீபாவளியின் முத்தாப்பு !
பரிசுகள் :
முதல் பரிசு : ரூ.1500 + சான்றிதழ்
இரண்டாம் பரிசு : ரூ.1000 + சான்றிதழ்
மூன்றாம் பரிசு : ரூ.500 + சான்றிதழ்
ஆறுதல் பரிசாக தேர்வு செய்யப்படும் ஏழு கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்… கலந்து கொள்பவர்கள் தங்களின் பெயர்,மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரிகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்…
வெல்லுங்கள்…! பரிசு அள்ளிச் செல்லுங்கள்…!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-