உன் நினைவில் நெஞ்சுக்குழிகாய்கிறது.
உன் நினைவில் நான்தினம் தினம் சாகிறேன்
செம்மண்சாலையில் தென் மேற்கு பருவக்காற்று
திசை மாறி சுழண்டு சுழண்டு வீசுகையில்
நீ நிழலுக்காக பிடித்து வந்த குடையை.
காற்றுத்திருடன் பிறை சூடி ஓடுகையில்
அவன் தாவி தாவி என்னிடமே கொண்டுவந்தான்
முன்பே காற்றுத் திருடனே அறிந்து விட்டான்
இவளின் காதலன் இவன்தான் என்று.
குடையை எடுத்து வந்து உன்னிடம் தந்த நினைவுகள்.
முதல்நாள் பார்த்துப் பேசிய போது.
காற்றின் காதலி நாணல் புல்
சாய்ந்து நிலமகளை பார்ப்பது போல
உன் முகமும் கால்ப்பெரு விரலும்
நிலமகளின் மேனியின் மேல்
நீ வரைந்த கோடும் எனக்கு கீறல் சித்திரமாய் இருந்தது.
நீ சென்ற பின் அந்த சித்திரத்தில்
மூன்று இலக்கம் இருந்தது.
அது என்னவென்று பார்த்தால்.
ஒன்று.நான்கு.மூன்று(1.4.3)என்ற இலக்கம் இருந்தது
அப்போதுதான் நானறிந்தேன்
என் காதலியே நம் காதலுக்கு
பச்சைக்கொடி காட்டிவிட்டாய்.
அந்த நாளும் அந்த நேரமும் ஆண்டும்
தனிமைப் பொழுதில்
ஒருகனம் மீட்டுப்பார்க்க சொல்லுகிறது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடரும்………..
பச்சைக்கொடி வந்து விட்டது போலிருக்கிறது, மகிழ்ச்சி மகிழ்ச்சி!
. காதலி காதலை ஏற்றுக் கொண்ட நாளை எண்ணி எண்ணி பார்க்கும் போது இன்பம்தான்.
வாழ்த்துக்கள்.
உவமைகள் அருமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
பச்சைக் கொடி காட்டியாகிவிட்டதல்லவா
வாழ்த்துக்கள் நண்பரே
1.4.3 ஐ ரசித்தேன்
கவிதையும் தொடர நல்வாழ்த்துக்கள்
பிங்குபாக்: சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-5 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்
குடையோடு பின்னிய கதை
சிறப்பாக அமைந்து இருக்கிறது!
தொடருங்கள்…
அருமையான நினைவலைகள் சொற்பிரவாகம் நன்று
// காற்றின் காதலி நாணல் புல்
சாய்ந்து நிலமகளை பார்ப்பது போல… //
அட…! வாழ்த்துக்கள் தம்பி…
குடை கொண்டு வந்த காதல்! தடையின்றி வளரட்டும்!