

பள்ளிக் காலங்களில்
பரீட்சைகள் முடிந்தது
சொந்தங்களைப் பார்க்க
வலிகள் தாங்கிய-இதயத்தை
மெதுவாக-தாங்கிய படி
புயல்காற்று மனதுக்குள்-வீசியதுபோல
வீதியை நோக்கி வருகிறேன்
பேருந்தில் ஏறுவதற்கு-வந்தது பேருந்து
இருக்கை இல்லாமல் கால்கள் வலிக்க வலிக்க
நின்ற நிலையில் பயணிந்த போது
ஓர் இருக்கையில் அழகிய இளம்பெண்-அமர்ந்திருந்தாள்
அந்த இருக்கையின் அருகே
நானும் அமர்ந்தேன் ஒன்றாக பயணித்தேன்
சில நிமிடங்கள் சில மணித்தியாலயங்கள்
அவள் பேசாமல் இருந்த ஒவ்வொரு
நிமிடங்களில் என்பார்வை-அவள் முகத்தை
சுட்டுக் கொண்டேயிருந்தது
ஏதோ இறைவன் செய்த
தவமென்று-தொரியவில்லை
அவள் கைக்குட்டை தவறுதலாக
பேருந்தில் விழுந்து விட்டது
அவள் ஜன்னல் ஓரத்தில்-இருக்கையில்
அவள் முடிகளை காற்று
திருடிக் கொண்டே இருந்தது
ஏதோ தன்னை மறந்து-கற்பணை
கடலில் மிதந்து கொண்டு -இருந்தாள்
அவள் கைக்குட்டையை-எடுத்து
என் கையாள் பொத்திய-படி
இந்தாங்கள் என்று-நீட்டினேன்
ஏதோ மெளனம் கலந்த
புன்னகை அவள் முகத்தில் -மலர்ந்தது,
அவள் சிரிப்பில் கட்டுண்டு
அவள் சிரிப்பு என் -கழுத்தில்
மாலையாக ஏறியது போல்-ஒரு
ஒரு புன்னகைப் புயல்-என்னுள் வீசியது
என் வீட்டில் இருந்து
உன் வீடு மூன்றாவது- வீதியென்று
நீ சொன்னபோதுதான் நான்-அறிந்தேன்
நீ சிறகுடைந்த பறவை-போல்
நீ வீட்டுக்குள் கட்டுண்டு கிடந்தாய்
என்பதை நீ சொன்னபோதுதான்-நான் அறிந்தேன்
நீ ஒரு சிறைக்கூட்டுக் -குயிலென்று
காதல் என்னும் சிறகை வளர்த்து
கூட்டை ஒடைத்து வெளியே வருவாயா
உன் விலாசம் அறிந்த-நான்
உன் வருகைக்காக-வீதியோரத்தில்
பயணிகள் நிழல் குடையின் கீழ்
பேருந்து பயணிகளில் ஒருவனாய்
உன் வருகைக்காக-நான்
காத்திருப்பேன் என் சிறைக் கூட்டுக் -குயிலே
நீ வெளியே வா…..வா…….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடலம்மா உன் குணம்யென்னம்மா
வங்கக் கடலில்-அலையும் அலையும்
யுத்தம் செய்து பாரும்
அதை கட்டியணைத்து
தழுவி வருகிறது தென்றால்-காற்று
முட்டி மோதி இழுக்குது-எங்களின் படகை
துடுப்பு உடைந்து போகுது-கடலில்
நீர்க்கரம் கட்டியணைக்குது
எங்களின் உயிரை
முத்துக்குவியலும் பவளக் குவியலும்
உன் இடத்தில் கொட்டிக் கிடக்குது
அதை தேடி எடுப்பதற்காய்
இல்லாத ஏழையும்
உன்னை நம்பி வருகிறோம்
உன் கரத்தாள் தாவியெடுத்து
மரணம் என்ற அடைமொழியை
ஏன் கொடுக்கிறாய் கடலம்மா
இது நாயமா நீதியா -சொல்லும் கடலம்மா
பட்டினியாய் ஏழைகள் வந்தாலும்
வாரிக் கொடுக்கிறாய் -செல்வங்களை
நாவுக்கு சுவையூட்டும் -நல்ல கனியான
உப்பையும் கொடுக்கிறாய் கடலம்மா
கோடி உயிரை மரணத்தின் சூது
கவ்வுவது போல ஏன் கவ்வுகிறாய்- கடலம்மா
இது நாயமா நீதியா- சொல்லும் கடலம்மா
கருணை முகம் காட்டும் கடலம்மா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அஜித் என்றாலே அழகுதான். அந்த அழகுக்கு அழகு சேர்ந்தார்போல் கொஞ்சம் தாடி மற்றும் மீசை மற்றும் தாடியை மலித்த தோற்றம் என இரண்டிலும் தல கலக்கலாக இருக்கிறார்.
சினிமாவில் இப்போது இருக்கும் ஹீரோக்களில் கோட் சூட் போட்டு ஹேண்ட்சம்மாக இருப்பவர்களில் இவருக்கே முதல் இடம். உண்மையிலே இவர் செம பர்சனாலிட்டி ஹீரோதான்.
அலட்டிக் கொள்ளாமல் நடிப்பதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு நிகர் அஜீத் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் படி வெளிவந்திருக்கும் படம் தான் பில்லா 2.
இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்கு வரும் டேவிட் பில்லாஇ அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகிறார். அகதிகள் முகாமில் இருக்கும் டேவிட் பில்லாவிற்கு ரஞ்சித் உள்ளிட்ட 3 பேர் நண்பர்களாகின்றனர்.
அப்பகுதி பாதுகாப்பு அதிகாரி சக அகதிகள் மீது நடத்தும் அடவாடித்தனத்தை கண்டிக்கும் டேவிட் பில்லா பாதுகாப்பு அதிகாரிக்கு எதிரியாகிறார். இதனால் பில்லாவை பழிவாங்க நினைக்கிறார்.
சென்னைக்கு மீன் ஏற்றிச் செல்லும் லாரியில் வைரத்தை வைத்து கடத்தும் கும்பலிடம் அஜித்தை சிக்கவைத்துஇ பழிவாங்க எண்ணுகிறார்.
மீனை ஏற்றிச் செல்லும் பொறுப்பை ரஞ்சித்தும்இ பில்லாவும் ஏற்கிறார். வழியில் சாதுர்யமாக தப்பித்துக் கொள்ளும் இருவரும்இ அதிலுள்ள வைரத்தை சென்னையின் பிரபல கடத்தல்காரரான செல்வராஜிடம் கொண்டு சேர்க்கின்றனர்.
இவர்களின் விசுவாசத்தை புரிந்து கொண்ட செல்வராஜ்இ இவர்களுக்கு சென்னையிலேயே சில கடத்தல் வேலைகளை கொடுக்கிறார்.
இந்நிலையில் கோவாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த போதைப் பொருளை சென்னையில் கைமாற்றிக் கொடுக்க செல்வாரஜை அணுகுகிறார் கோட்டி. அப்பொருளை கைமாற்ற தான் உதவி செய்வதாக பில்லா அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
கைமாற்றுவதில் ஏற்படும் தகராறில் ஒரு கொள்ளைக் கும்பலை அடித்து துவம்சம் செய்து விட்டுஇ கோட்டியின் தலைவனான அப்பாஸியிடம் நேரடியாக அந்த டீலை முடிக்கிறான் பில்லா. அதன்பிறகு அப்பாஸியிடம் சேர்ந்து கொண்டு சர்வதேச அளவில் கடத்தல் தொழிலில் கில்லாடியாகிறார் பில்லா.
சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் டிமிட்ரியின் பல கோடி ரூபாய் ஆயுதங்கள் இந்தியாவில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்கிறது.
அதனை பில்லாவை வைத்து கைப்பற்றி கொடுத்து டிமிட்ரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறும் அப்பாஸியை தன்னுடைய நாடான பரோவியாவிற்கு அழைப்பு விடுக்கிறான்.
அப்பாஸிக்கு பதிலாக கோட்டியும்இ பில்லாவும் பரோவியா செல்கின்றனர். அங்கு நடக்கும் பேச்சுவார்த்தையில் அப்பாஸியிடம் கலந்தாலோசிக்காமல் ஆயுத ஒப்பந்தத்தை முடிக்கிறான் பில்லா.
இது துளியும் திருப்தியில்லாத அப்பாஸி பில்லாவை தீர்த்துக்கட்ட நினைக்கிறான். இதிலிருந்து தப்பிக்கும் பில்லா முடிவில் அப்பாஸியையே தீர்த்துக் கட்டுகிறான். அதன்பிறகு ரஞ்சித் – பில்லா இருவரும் தனியாக இந்த பிசினஸை செய்ய முடிவெடுத்து களத்தில் குதிக்கிறார்கள்.
இதற்கு உதவும் சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் டிமிட்ரியையே ஒரு கட்டத்தில் பில்லா எதிர்க்கிறான். இதனால் ஆத்திரமடைந்த டிமிட்ரி அரசியல்வாதி மற்றும் அப்பாஸியின் உதவியாளர் கோட்டியுடன் கைகோர்த்துக் கொண்டு பில்லாவை தீர்த்துக் கட்ட எண்ணுகிறான்.
முடிவில் பில்லா அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கினாரா? இல்லை அவர்களை துவம்சம் செய்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் வித்தியாசமான முறையில் வசனம் பேசியிருக்கிறார் தல. தேவைப்படும் இடத்துல மட்டும் டயலாக். மற்ற இடங்களில் முகபாவணைகளிலேயே பேசுகிறார்.
அஜித்தின் அக்கா மகளாக வரும் பார்வதி ஓமனக்குட்டன் சில காட்சிகளே வருகிறார். அவருக்கு காதல் பண்ணுவதற்கும்இ நடிப்பதற்கும் வாய்பில்லாமல் போய்விட்டது.
இன்னொரு நாயகியாக புருனா அப்துல்லாஇ அவ்வப்போது கவர்ச்சியில் வருகிறார்.
சென்னை கடத்தல் தலைவனாக இளவரசுஇ கோவா கடத்தல் கும்பல் தலைவனாக சுதன்சு பாண்டேஇ சர்வதேச கடத்தல் கும்பல் தலைவர் வித்யூத் ஜம்வல் ஆகியோர் தங்கள் வேலைகளை மட்டும் செய்துவிட்டு போய்விடுகிறார்கள்.
குறிப்பாக “உக்காந்து வேலை வாங்குறவனுக்கும்இ உயிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு” மற்றும் “போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம்தான்… போராடிட்டு இருக்கிறவன் தோத்துட்டா அவன் தீவிரவாதிஇ ஜெயிச்சுட்டா அவன் போராளி” என்பன போன்ற வசனங்கள் தியேட்டர்களில் கைதட்டல்களை அள்ளிச் செல்கின்றன.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-