கடலம்மா உன் குணம்யென்னம்மா
வங்கக் கடலில்-அலையும் அலையும்
யுத்தம் செய்து பாரும்
அதை கட்டியணைத்து
தழுவி வருகிறது தென்றால்-காற்று
முட்டி மோதி இழுக்குது-எங்களின் படகை
துடுப்பு உடைந்து போகுது-கடலில்
நீர்க்கரம் கட்டியணைக்குது
எங்களின் உயிரை
முத்துக்குவியலும் பவளக் குவியலும்
உன் இடத்தில் கொட்டிக் கிடக்குது
அதை தேடி எடுப்பதற்காய்
இல்லாத ஏழையும்
உன்னை நம்பி வருகிறோம்
உன் கரத்தாள் தாவியெடுத்து
மரணம் என்ற அடைமொழியை
ஏன் கொடுக்கிறாய் கடலம்மா
இது நாயமா நீதியா -சொல்லும் கடலம்மா
பட்டினியாய் ஏழைகள் வந்தாலும்
வாரிக் கொடுக்கிறாய் -செல்வங்களை
நாவுக்கு சுவையூட்டும் -நல்ல கனியான
உப்பையும் கொடுக்கிறாய் கடலம்மா
கோடி உயிரை மரணத்தின் சூது
கவ்வுவது போல ஏன் கவ்வுகிறாய்- கடலம்மா
இது நாயமா நீதியா- சொல்லும் கடலம்மா
கருணை முகம் காட்டும் கடலம்மா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-