சர்வ வல்லமையும்-கொண்ட,
சர்வ சக்தியே-நீ
உண்னை சாதாரண-பெண்என்று
நான் நினைத்தேன்-ஆனால்
நீ சாதித்து சரித்திரம் படைக்க
பாரினில் அவதரித்த-புதுமைப்பெண்
பிள்ளைக்கு நல்ல-தாயாகவும்
அன்புக்கணவனுக்கு-நல்ல,துணைவியாகவும்
வாழ்வில் ஒளிவிளக்கு-ஏற்றினாய்,
என் இதயக் கோயிலே-நீ
சமாதியடைந்து விட்டாய்
உன் நினைவுகளுடன் வாழ்வதற்காய்
உன் நிழல் படத்தினை-என்
நெஞ்சில் தாங்கிய படி-வாழ்கிறேன்,
கார்கால மார்கழியில்,
கருமேகம் வானத்தில்-குடைசூழ,
முரசு முழங்குவது -போல,
இடிகள் முழங்குகிறது,
வானில் சந்திரனும்,
அழகிய வில் போன்ற-வானவில்லும் வளைந்து,
மலை உச்சிதனை தொடுவதை-போன்று
மேகங்கள் கடல் நீரை முகந்துகொண்டு,
வானவில் எழுந்து வானத்தை -வட்டமிட
இந்த கார் காலத்தில் -நீ சமாதியடைந்தாயே,
என் இதயக் கோயிலே-உன் புகைப்படத்தினை
என்நெஞ்சில் நிழல் -படமாக தாங்கியபடி
உன் நினைவுக் கீற்றில்-வாழுகிறேன்,
காற்று ஒருகனம்வீச- மறுத்தாலும்
பூவி கூட சுற்றாமல்- நின்றாலும்
உன்னுடன் சேர்ந்து வாழ்ந்த
காலங்களை நினைத்துப்பார்க்கையில்
நிஜமற்ற இவ்வுலகில்
நிஜமான அன்பையும்,
நிஜமான வாழ்வையும்,
நிறைய தந்தாயே,
என் இதயக் கோயிலே,
நீ வாழ்க நீ வாழ்க
அன்றோபறை சாற்றினான்-தமிழன்
ஒருத்தனுக்கு ஒருத்திஎன்று,
நீ இல்லை என்று -நினைத்து
நான் மறுமணம் செய்யமாட்டேன்
உன் நினைவுகளை -என் மனதில்
சுமந்தவாறு-நான் வாழ்கிறேன்
என் இதயக் கோயிலே,
நீ வாழ்க நீ வாழ்க,,,,,,,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-