ரூபன் யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் கவிதைப்போட்டி
வணக்கம்
வலையுலக உறவுகளே
தீபாவளியை முன்னிட்டு இணையத்தளத்தில் படைப்புக்களை படைத்துவரும் படைப்பாளிகளுக்கு என்னால் இயன்றஅளவு ஊக்குவிக்க வேண்டும் என்ற சிந்தனை என்னுள் உதித்ததன் விளைவாக ஒருமாதம் கவிதைப்போட்டி நடைபெற்றது அதன் இறுதி வடிவம் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது….
கவிதைப்போட்டியில்மொத்தமாக பங்கு பற்றியவர்களின் விபரம் நாளை பதிவாக வலம் வர உள்ளது பார்க்காதவர்கள்.பார்க்கலாம் மொத்தமாக 54 பேர் பங்கு பற்றியுள்ளார்கள் ஒருவர் இருகவிதை என்ற அடிப்படையில் 108 கவிதைகள் வந்துள்ளது.அதில் 10 பேர் சிறந்த போட்டியாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது
குறிப்பாக சில நுணுக்கங்களை கையாண்டு நடுவர்கள் மிகத் திறமையாக தெரிவு செய்தார்கள் உதாரணமாக ஒரு தொலைக்காட்சில் பாட்டுப்போட்டி நிகழ்ச்சி போலதான் போட்டிக்கு வருகிற பாடகர்கள் அனைவரும் மிக அருமையாக பாடுகிறார்கள் நடுவர்களின் கட்டாயத் தீர்ப்பு ஒருவரை தெரிவுசெய்யவேண்டும்…அங்கும் சில நுணுக்கங்களை கையாண்டு நாடுவர்கள் தெரிவு செய்கிறார்கள்
அதைப் போல எல்லா படைப்பாளிகளும் மிக நன்றாக கவிதை எழுதியுள்ளார்கள் அவர்களுக்கு முதல் நான் பாராட்டை தெரிவித்துகொள்கிறேன்
வெற்றி வாகை சூடிய போட்டியாளர்களின் விபரம் வருமாறு..
1.ம் இடம் திருமதி- கவிஞர் –இளமதி
வலைத்தள முகவரி-http://ilayanila16.blogspot.com/2014/08/2014.html
2.ம் இடம் திரு –கவிஞர்-சிவகுமாரன்
வலைத்தளமுகவரி-சிவகுமரன் கவிதைகள்
3.ம் இடம் இரா.எழிலி
வலைத்தளம் இல்லை மின்னஞ்சல் கவிதை
வண்ண மலர்ச்சரத்தை வாடுமுன்னே சூட்டிவிடு!
புத்தாடை உடுத்த
புன்முறுவல் பூத்த
மன்னவன் பார்த்திடவ
மலர்ந்திங்கு நின்றாயோ?
ஓவியமாய் உனைப்பார்த்துக
காவியங்கள் படைப்பானோ?
பிடையிடையில் மலர்க்கூட
உடைக்கேற்ற பூச்சரங்கள்!
காந்தக் கண்ணால
கவர்ந்தாயோ மன்னவனை!
சார்ந்து நிற்பவளின
சஞ்சலங்கள் அறியானோ?
கஞ்சிக்குள் உப்பா
கலந்திட்ட அவன்நினைவால
வஞ்சியவள் நெஞ்சத்தில
கொஞ்சமல்ல கற்பனைகள்!
பூத்த புன்னகையும
பூவிதழ் தேன்சுவையும
மேவிய காதலினால
மென்மேலும் வளராதோ?
நித்திரையில் முத்திரையாய
நின்றிருக்கும் மன்னவனே!
வண்ண மலர்ச்சரத்த
வாடுமுன்னே சூட்டிவிடு!
தழைக்காதோ தாயகமே!
நாட்டின் உயர்வுக்க
நாளுமொரு திட்டம்!
வீணர்கள் சிலரால
விழலுக்கு நீராக!
எங்கே பிழை என்று
ஏங்கிநாம் தவிக்கின்றோம்!
தாங்கிவரும் செய்திகள
தலைக்குனிவைத் தந்திடுதே!
சிறுமியர்க்குக் கொடுமைகள்!
வறுமையால் தற்கொலைகள்!
கற்பழிப்பு, கொலைகளெலாம
ஏற்புடைத்தா? எண்ணிடுவோம்!
மதுவுக்கு அடிமையெ
மயங்கிக் கிடப்போரின
குடும்பங்கள் சீரழிந்த
படுந்துயரம் பரிதாபம்!
ஒருதலைக் காதலுக்க
உடன்படவில்லையெனில
தெருவழி வரும்போத
திராவகத்தை வீசுவதா?
உள்ளத்தில் தெளிவுடன
ஒழுக்கமாய் வாழ்ந்திட்டால
விழுமிய நிலையடைந்த
தழைக்காதோ தாயகமே!
திரு.புதுவைப் பிரபா
வலைத்தமுகவரி-புதுவை பிரபா
புதுவை .செந்தில்
வலைத்தள முகவரி–புதுவை செந்தில்
.திரு. காரஞ்சன்-
வலைத்தள முகவரி–காரஞ்சன்
மருத்துவர் கே.தனசேகரன்–
வலைத்தளம்-இல்லை.-மின்னஞ்சல் கவிதை
சியமளா .ராஜசேகர்
வலைத்தளம்-இல்லை.-மின்னஞ்சல் கவிதை
காத்திருக்கும் கன்னி (வெண்பாக்கள் )
கண்ணிரண்டில் காதலுடன் காத்திருக்கும் கட்டழகி
கண்டாங்கி கட்டிக் கவர்ந்திடுவாள் – எண்ணற்ற
கற்பனைகள் நெஞ்சிலோட கால்கடுக்க நின்றிருப்பாள்
நற்றமிழ் தேன்மொழி யாள் .
செஞ்சாந்து பொட்டுவைத்து செவ்வரளிப் பூத்தொடுத்து
கெஞ்சுவிழிப் பார்வையால் கிள்ளினாய் -மஞ்சுளமே
முத்துநகைப் போட்டவளே முல்லைப்பூ வைத்தவளே
சித்திரமே பெண்ணே சிரி .
பூக்கூடை மெல்லிடையில் புன்முறுவல் பூத்தபடி
ஏக்கமுடன் பார்த்தல் எவருக்காய் ?- சீக்கிரமே
வாரானோ காக்கவே வைப்பானோ அன்றியும்
சேரானோ உன்னையே சொல் .
கடிதம் வருமெனக் காத்திருந்து மெல்லத்
துடிக்கும் இதயத்தைத் தேற்றி – அடித்த
மணியோசைக் கேட்டு மலரை, சிலைக்கு
அணிவிக்கச் சென்றாள் அணங்கு .
மஞ்சளிலே பட்டுடுத்தி மாங்கல்யம் சூட்டிட
வஞ்சியைக் கைப்பிடிக்க வந்தானோ ?- கொஞ்சிட
இன்பமது பொங்கும் இசைவெள்ளம் பாய்ந்திடும்
அன்புமனம் ஒன்றுகலந் தால் .
கன்னியவள் பார்வை கவிதைபல சொல்லிடும்
தென்பொதிகைச் சாரலாய் பூத்தூவும் – கன்னலாய்
தித்திக்கும் வான்மழையும் தேன்சிந்தும் என்றுமே
சித்திக்கும் காதல் சிறப்பு
விடியல் வந்திட இருளும் விலகும் !!!
ஒடிந்த உள்ளத்தை ஒன்றாய் இணைத்து
>>>ஒட்டிட முடியுமோ செல்லக் கிளியே ?
இடியாய்த் தாக்கும் துன்பங்கள் தொடர்ந்தால்
>>>இன்பம் வருமோ செல்லக் கிளியே ??
நொடிக்குள் நூறு சலனங்கள் மனதை
>>>நொந்திடச் செய்யும் செல்லக் கிளியே !
வடிக்கும் விழிகள் வஞ்சக சூழ்ச்சியால்
>>>வதனமும் வாடும் செல்லக் கிளியே !!
குடிக்கும் மனிதன் திருந்த மறுத்தால்
>>>குடும்பம் குலையும் செல்லக் கிளியே !
அடிதடி சண்டை அடிக்கடி நடந்தால்
>>>அமைதி விடைபெறும் செல்லக் கிளியே !!
பிடித்த வாழ்க்கை அமையா விட்டால்
>>>பிறவியும் சாபமே செல்லக் கிளியே !
துடிக்கும் இதயம் தன்பணி முடித்தால்
>>>துக்கமே இல்லத்தில் செல்லக் கிளியே !!
படிக்கும் மனதில் அறியாமை அகன்று
>>>பகுத்தறிவு நிறையும் செல்லக் கிளியே !
முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்
>>>முயற்சி கைகூடும் செல்லக் கிளியே !!
வெடிக்கும் பட்டாசு ஒளியில் மகிழ்ச்சி
>>>வெள்ளம் பொங்கும் செல்லக் கிளியே !
விடியல் வந்திட விலகிடும் இருளும்
>>>விரக்தி ஏனடி செல்லக் கிளியே ….!!!
புதுவை சந்திரஅரி
வலைத்தளம்-இல்லை.-மின்னஞ்சல் கவிதை
பூக்கூடையை சுமந்த பூவே.
பூவுக்கு எதற்கு பூக்கூடை?
உன்னில் எத்தனை பூக்கள்
பூக் கண்ணில் எத்தனை பாக்கள்
நீ நிப்பதேஒரு கவிதை
உன் நளினமே ஒரு காவியம்
நீ ஒர் அழகு ஓவியம்
உன் இதழ்கள் தேன் மலர்கள்
உன் விழிகளில் என்ன கவர்ச்சி?
அது தருகிறதே புத்துணர்ச்சி
கன்னங்கள் தங்க கிண்ணங்களா?
அதில் உள்ளது முத்துக் குவியல்களா?
உன் இதழ்களின் புன் சிரிப்பு
புன் பட்டதே பார்த்த மனசு
உன் ஓரப்பார்வை யாரைத் தேடுகிறது?
என் ஆசை அது என்னைத்தான் என்று.
உன் வளையல்கை தொடும் பூக்களில்
நானும் ஒன்றாக கூடுமோ சொல்.
ஒயிலாக நிற்கின்ற மயிலே
கொஞ்சம் பாடினால் என் குயிலே.
வாசலில் நிக்கும் வெண்நிலவே.
பௌர்ணமிதான் என்றும் உன் வீடு
கவிதை புனைய கற்பனை வேண்டும்
உன் முகமே என் கவிதைக்கு விதை
சுமைகள்
பிறந்தவுடன் பயணம் செய்தேன் இறப்பதற்கு
போகும் வழியில் எதையெதையோ சுமப்பதற்கு
தத்தி தத்தி நடக்கையிலே என்ன என்ன சுகங்கள்
தள்ளாடிப் போகையிலே எத்தனையோ சுமைகள்
பள்ளி போகையில் பாடங்களை சுமந்தேன்
படித்துமுடிக்கையிலே பட்டங்களை சுமந்தேன்
பருவத்தின் வாசலிலே கனவுகளை சுமந்தேன்
பாவையாரை கான்கையிலே கற்பனைகள் சுமந்தேன்
வேலைஒன்றை தேடும்போது விரக்தியினை சுமந்தேன்
வேலையது கிடைத்தபோது பேராசைகளை சுமந்தேன்
ஆசைக்கு ஒருத்தியென்று வந்தவளை சுமந்தேன்
ஆசையோடு அவள் பெற்றவரை பாசத்தோடு சுமந்தேன்
பெற்றபிள்ளை வளர்த்திடவே தியாகங்களை சுமந்தேன்
வளர்த்தபிள்ளை விட்டுஓடும்போது வேதனையை சுமந்தேன்
சொந்தம்மென்று பந்தமென்று பலபேரை சுமந்தேன்
அவள் தந்த தொல்லைகளை சுகமென்றே சுமந்தேன்
முதுமையிலே தனிமையிலே வெறுமையினை சுமந்தேன்
முச்சுவிடும் நேரத்திலும் ஆசைகளை சுமந்தேன்
உடலோடு சேர்ந்துவரும் உயிரையும் நான் சுமந்தேன்
உயிர் போகும் நேரத்திலும் நான் செய்த பாவங்களை சுமந்தேன்
சிற்றுளி என்ற ராம் கணேஷ்–
வலைத்தளம்-இல்லை.-மின்னஞ்சல் கவிதை
நிறை’ அர்த்தநாரி
பட்டுடுத்தி பூவை விற்கும்….
பூவை எதிர் பார்ப்பதெல்லாம்….
பட்டறிவால் ஊர் அறிந்த….
பண்பட்ட ஆண் மகனை!
மைவிழியால் மையல் கொண்டு….
மயக்கு பார்வை பார்ப்பதெல்லாம்….
தன்சுயத்தால் தானே நிற்கும்….
திண்மை கொண்ட ஆடவனை!
பூச்சரத்தை முழம் அளக்கும்….
நெஞ்சுரத்தை மனம் அளக்கும்….
பார்வையாலே தரம் அளக்கும்….
இவளுண்மை ‘துலாக்கோலே’த்தான்!
எலுமிச்சைக் கனி முகத்தாள்….
இமையசைவைப் பெற்றுவிட்டால்….
எழுமிச்சை ஆசைத் தீர்க்க….
பாரில் நாளும் போர்கள் மூளும் !
இடைநில்லா கூடைப்பூவை….
தடையில்லா மாலையாக்கி….
சுயம்வரத் தீ மூட்டிவிட்டால்….
பகை நாடும் நட்பாய் மாறும்!
பெண்மையின்றி ஆண்மையில்லை!
மென்மையில்லா மேன்மையில்லை!
ஆண்பெண் நிகர் இல்லையென்றால்….
“அர்த்த நாரி” உலகில் இல்லை!!!!
வெளிச்சம்
காலை வேளையில் கதிரவன் சிவந்து
தருவது ஓர் வெளிச்சம்!
நண்பகல் வேளையில் அவனே தருவான்
சூட்டுடன் ஒளி வெளிச்சம்!
அந்தி மாலையில் சூரியன் ஓய்ந்து
அளிப்பதும் ஓர் வெளிச்சம்
இது மானிட குணத்தை விளக்கிட வருகிற
‘திரு’வதன் ‘ஒலி’ – வெளிச்சம்!
ஈகையும் கோபமும் வெளிச்சமாய் இருந்தால்
பாதிப்பு இருப்பதில்லை!
வஞ்சனை கேடு வெளிச்சமாய் இருந்தால்
நற்குடி வாழ்வதில்லை!
நண்பகல் வேளைப்போல் செல்வம் பெருகிடின்
பஞ்சம் நிலைப்பதில்லை!
வாழ்வினில் பக்குவம் எழுபதில் வருவதால்
மோட்சமும் கிடைப்பதில்லை!
இருட்டினில் மெழுகினை ஏற்றிடக் கிடைப்பது
சிந்தனை செயல் வெளிச்சம்!
மூடத்தைப் போக்கி கல்வியை விதைப்பது
ஆளுமை தரும் வெளிச்சம்!
ஆழ்மனம் தூண்டி அறிவொளி தருவது ஆற்றலின் உயர்
நல்வழி காட்டி தலைமுறை வளர்ப்பது
நிகரற்ற ஓர் வெளிச்சம்!
பல வழிகளில் கவிதைப்போட்டியை நடத்தபக்க பலமாக இருந்த நடுவர்கள்
திரு.கவிஞர். கி.பாரதிதாசன் (ஐயா)
திரு.கவிஞர். ரமணி (ஐயா)
டெக்டர்- எழுத்தாளர்-திரு.முருகானந்தன் ( ஐயா)
இவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறேன்
அத்தோடு கவிதைப்போட்டியின் நிருவாக குழு அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்
அத்தோடு பல வழிகளில் பலவகைப்பட்ட உதவிகளை செய்து போட்டியை நடத்த வேண்டும் என்று உச்சாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் என்னுடன் சேர்ந்து போட்டியை நடத்திய
எழுத்தாளர் திரு. யாழ்பாவாணன் ( அண்ணா) அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்…
வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கம் சான்றிதழ் மற்றும் புத்தகம் எல்லாம் மிக விரைவாக அனுப்பிவைக்கப்படும் கீழ் உள்ள விபரங்களை கீழ்காணப்படும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
1 .முகவரி
2. தெலைபேசி இலக்கம்
இந்த இரண்டையும் காலம்தாமதிக்காமல் அனுப்புமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்
சிறப்புச் செய்தியாக
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மீண்டும் உலகம் தழுவிய போட்டிகள் நடத்ததிட்டமிட்டுளேன்.. மிக ஆர்வமாக பங்கு பற்றுங்கள்… இது சம்மந்தமான அறிவித்தல் மிக விரைவில் வலம் வரும்………
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். கவிதைகளைப் படித்தபோது வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க தாங்கள் எடுத்த முயற்சியை அறியமுடிகிறது. மிகவும்அருமையான கவிதைகள்.
கலந்து கொண்ட அனைவருக்கும்… கலந்து கொண்டவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்…
கலந்து கொண்ட அனைவருக்கும்… கலந்து கொண்டவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்…
போட்டியில் வெற்றி வாகை சூடியவர்களுக்கு வாழ்த்துக்கள் !
ஒவ்வொரு கவிதையும் அருமை நண்பரே
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
இச்சிறப்பு மிக்க போட்டியினை நடத்திய தஙகளுக்கும் வாழ்த்துக்கள்
வெற்றிபெற்ற அனைவருக்கும்பாராட்டுக்கள்.போட்டி நடத்திய இருவருக்கும் வாழ்த்துக்கள்–சரஸ்வதி ராசேந்திரன்
அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தம்பி…
போட்டியில் வெற்றிவாகை சூடியவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்….