
நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்…….!
என்னை அறியாமல் எனது சிந்தனை சிறகுக்குள் சிறகடித்துப் பறந்த வண்ணத்து பூச்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து.. இன்று பல வகைப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் உருவாகியது என்னுடைய எழுத்துப்படைப்புக்கள்
வலையுலகம் பரந்து படர்ந்த நீலத் திரை வானம் போன்றது..அந்த நீலநிற வான வெளியில் ஆயிரம் ஆயிரம் வலையுலக நண்பர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்து… அவர்கள் தரும் ஒவ்வொரு கருத்துக்களும் என்னை ஒருபடி செதுக்கிகொண்டே இருக்கிறது…
எழுதிக் கொண்டு இருக்கேன் என்றால்… முகம்அறிந்தும் முகவரி அறியாத முகம் தெரியாத உறவுகள் எத்தனை பேர் என்னுடைய எழுத்துக்களை இரசித்து கருத்துக்களை இட்டுள்ளார்கள் அந்த வகையில் அவர்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்-உங்களின் நட்பையும்.வாழ்த்துகளையும் தேடி…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பு-வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி தளத்தில் களஞ்சியப்படுத்தப்படுகிறது.உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.நீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை இந்ததளத்தில் உடனடியா சென்று இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள் இதோ முகவரி–http://thamizha.2ya.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தாங்கள் மென்மேலும் தமிழை வளர்க்க எனது வாழ்த்துக்கள்.
நான் சிறிதுநாட்களாக வரவில்லை. அடடா.வாழ்த்து சொல்ல பார்க்கவில்லையே என்று தோன்றியது. எப்போதுமே வாழ்த்த நினைக்கிறேன். நான்காம் ஆண்டு என்ன எப்போதுமே உங்களுக்கு என் நல் வாழ்த்துகள். அன்புடன்
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…!
வணக்கம் சகோதரர்
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள். இணைய வானில் யாரும் தொட துணியாத உயரங்களைத் தொட்டு தங்களது எண்ணங்களை எழுத்தாக்கி பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துவதோடு தங்களோடு தொடர்ந்து பயணித்து உறுதுணையாக இருப்பேன் என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கிறேன்.
—————
05/02/2014 அன்று பிறந்த நாள் கண்ட தங்களுக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்
அன்பு சகோதரருக்கு வணக்கம்
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எனது சகோதரருக்கு எனது அன்பான வாழ்த்துகள். தனது எண்ணங்களை எழுத்தாக்கி இன்னும் இணைய வானில் பறந்து யாரும் எட்ட முடியாத உயரங்களைக் காண வாழ்த்துவதோடு என்றும் உங்களோடு பயணித்து உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்து மகிழ்கிறேன். நன்றி சகோதரர்.
———
05.02.2014 அன்று பிறந்த நாள் கண்ட தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரர். வாழ்வின் எல்லா வளங்களையும் பெற்று வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
நான்காவது வருடத்திலிருக்கும் உங்கள் வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள்
நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……!//
வாங்க, வாங்க ரூபன். உங்கள் வரவு நல்வரவாகுக :))
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ரூபன். தொடரட்டும் உங்கள் செறிவான ஆக்கங்கள்.
நாலாபுறமும் நல்லா வருவீங்க !எழுத்துப் படைப்புக்களில் ரூபனின் ரூபம் ஜொலிக்க வாழ்த்துக்கள் !
என் அன்பு வாழ்த்துக்கள் ரூபன்.
வணக்கம் ரூபன் !
நாலாவது ஆண்டில் எடுத்தடி வைக்க என் மனம் கனிந்த நல்லாசிகள்.
எண்ணிய எண்ணம்
எல்லாம் ஈடேற
புகழோடு பொருளும்
கை கூட என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…..!
நான்காவது வருடத்திலிருக்கும் உங்கள் வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள் ரூபன்.
வாழ்க வளமுடன்.
என்றும் எழுது நண்பா!
“நான்காம் ஆண்டில்
நாலா புறமும் வருவேன்!” என்று
இலகுவாகச் சொல்லிப் போட்டியள்…
எழுதுகோல் ஏந்தியே
பதிவுலகில் நடப்பதென்பது
கூரிய கத்தி விளிம்பில்
நடப்பது போலத் தான்
இருக்குமென்பதை நானறிவேன்!
என்றும் எழுது நண்பா…
கடந்தது மூன்றாண்டு
கற்றுக்கொண்டதோ
முப்பதாயிரத்துக்கு மேல்
இருக்குமென நானறிவேன்!
நான்காம் ஆண்டில்
நாலா புறமும் மட்டுமல்ல
உலகின் எட்டுத் திக்காலும்
தமிழ் பரப்பிப் புகழீட்ட
எனது வாழ்த்துகள் ஐயா!
“எண்ணித் துணிக கருமம்
பின்
எண்ணுவோம் என்பது இழுக்கு” என்று
வள்ளுவன் கூறியதாக நினைவு – நானதை
எழுதி வெளியிடு முன்
பின்பற்றுவதன் நோக்கமே
எமது எழுத்து
எல்லோரையும் களிப்படைய வைக்கணும் – அதை
நான் சரிபார்ப்பதற்கே!
என்றும் எழுது நண்பா…
தங்கள் எழுத்தால்
எல்லோரும் களிப்படைய மட்டுமல்ல
உலகெங்கும் தமிழ் வாழ
என்றும் எழுது நண்பா…
போட்டிகள் நடாத்தி
பிறருக்கு ஒத்துழைத்து
தமிழ் வளர்க்கப் புறப்பட்ட
தம்பி ரூபன் அவர்களே
நம்பி என்றும் எழுத
எனது வாழ்த்துகள் ஐயா!
அன்புத் தம்பிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…
தமிழ் ஆர்வம் மிக்க உங்கள் தொடர்பு கிடைத்ததும்
எங்கள் பாக்கியமே
அன்பு வலையில் தொடர்ந்து இருப்போம்
வாழ்த்துக்களுடன்…
வாழ்த்துக்கள் நண்பரே! நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமைக்கு! இனியும் தாங்கள் தொடர்ந்து மேலும் மேலும் படைப்புகள் படைத்து வளர எங்கள் இதயம் கனித வாழ்த்துக்கள்!
த.ம.
வாழ்த்துக்கள் சகோ .பகிர்வுக்கு மிக்க நன்றி –
வாழ்த்துகள் ரூபன்! இன்னும் பல ஆண்டுகள் உங்கள் எழுத்துத் தொடர வாழ்த்துகள்!
குறிப்பிற்கு நன்றி!
நான்காம வருடத்தில் அடியெடுத்து வைத்தமைக்குப் பாராட்டுக்கள் இன்னும் பல வருடங்கள் தமிழுக்கு சேவை செய்ய உங்களுக்கு எல்லாவிதமாக அருளும் வழங்க அந்த இறைவனை வேண்டுகிறேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
நான்காம் வருடத்தில் இருப்பதற்கு வாழ்த்துகள் ரூபன்.
பதிவுலகில் நான்காம் ஆண்டில் நடையெடுத்து வைக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வணக்கம்
உறவுகளே
நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்-உங்களின் நட்பையும்.வாழ்த்துகளையும் தேடி…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-