கொல்லாதே என்னைக் கொல்லாதே………….
இதயமே…….. இதயமே……..
என்னை ஏன் கொல்லுகிறாய்
ஆயிரம் பூக்கள் என் மீது
விழுகிறது-அந்த பூக்களை
தூக்கி எறிந்து விட்டு-நீதானே
என் இதயத்தில் சூடும் மலராக
நான் நினைக்கிறேன்
நீ ஏன் முற்களாய் குத்துகிறாய்
ஒவ்வொரு நிமிடமும்-
உன் நினைவுதான்
காதலின் நினைவையும்
வேதனையில் வடித்த கண்ணீரின்
நினைவையும் என் இதயம்
சுமந்து வருகிறது,-அதை நீ அறிவாயா?
உன்னோடிருந்த நிமிடங்களை
நினைத்து நினைத்து திரும்பி பார்கையில்
என்வீட்டு சுவர்க்கடிகாரம்
அந்த நாளிகை காட்டுகையில்
அதை மறக்க முடியவில்லையடி………
நான்கு(4) வருடங்கள் பார்த்து பார்த்து
உன் முகம் என் நெஞ்சுக் குழிக்குள்
புதைந்து கிடக்கிறது…………………..
நாளுக்கு நாளாய் ஆண்டுக்கு ஆண்டாய்
பார்த்து பார்த்து வளர்ந்த காதல்
வெறும் பேச்சில் முறிந்து போனதடி……..
நீ பிரிந்தாலும் நீ சேர்ந்தாலும்
உன்நினைவு எப்போதும்
என் இதயம் சுமந்த வண்ணம் இருக்கும்………
என் தூரிகை உதடுகளால்
கண் இமைக்காமல் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
தாஜ் மஹால் ஓவியமாய் இருக்குதடி
என்றாவது ஒரு நாள்-நான்
ஏன்பிரிந்தேன் என்று-நீ
எப்படி தெரிந்து கொள்வாயே
அப்போதுதான் நான் -இருப்பேன் உனக்காக
எனது வாழ்வில் விடியல் மலர
உனது துணை-தேடுது,………………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
“நான்கு(4) வருடங்கள் பார்த்துப் பார்த்து
உன் முகம்
என் நெஞ்சுக் குழிக்குள்
புதைந்து கிடக்கிறது…” என்ற அடிகளில்
நீண்ட நாள் காதலையும்
“நீ பிரிந்தாலும் நீ சேர்ந்தாலும்
உன்நினைவு எப்போதும்
என் இதயம் சுமந்த வண்ணம் இருக்கும்” என்ற அடிகளில்
நினைவில் உருளும்
காதலியின் பதிவுகளையும்
காதலனின் நினைவுகளையும்
வெளிப்படுத்தும் நல்ல கவிதை!
வணக்கம்
நன்றி…..நனறி….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_15.html) சென்று பார்க்கவும்… நன்றி…
வணக்கம்
தனபால்(அண்ணா)
எனக்கு தெரியாது இன்றுதான் நான் பார்த்தேன் தகவல் தந்தமைக்கு மிக நன்றி அண்ணா(ஏன் என்றால் கோயில் திருவிழா அதனால் வலைப்பக்கம் வரவில்லை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதல் வேதனையை அழகாகவெளிப்படுத்துகிறது கவிதை. சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். ரூபன்
வணக்கம்
முரளி(அண்ணா)
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது அதை திருத்தி விட்டேன் தெரியப்படுத்தியமைக்கு மிக நன்றி அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான கவிதை…
அவள் துணை விரைவில் கிடைக்கும்…
வணக்கம்
வெற்றிவேல்
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி வெற்றிவேல்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் தூரிகை உதடுகளால்
கண் இமைக்காமல் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
தாஜ் மஹால் ஓவியமாய் இருக்குதடி//
அற்புதமான வரிகள்
காதல் உணர்வை அருமையாக
வெளிப்படுத்தும் அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
முதல் வருகையும் முதல் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது மிக நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(கொல்லாதே என்னைக் கொல்லாதே…!)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-