34 comments on “ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி

  1. திரு.ரூபன்,

    வராத ஒன்றில் போட்டி வைத்துள்ளீர்கள். பங்குகொள்ளத்தான் முடியாது, ஆனால் பார்வையாளராக கலந்துகொள்வேன்.

    நல்ல முயற்சி,போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

  2. ஐயா! என் கவிதையை பார்த்திருப்பீர்கள். காலையில் அலுவலகம் செல்ல நேரமானதால் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்ப மறந்துவிட்டேன். தாங்களே பார்த்துவிட்டதால் அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் விதிமுறைப்படி மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டுமென்றால் அனுப்பிவிடுகிறேன். நன்றி.

  3. பிங்குபாக்: துரத்தும் பதவி! | ranjani narayanan

  4. இந்த கவிதைப் போட்டி படைப்பாளிகளை ஊக்கிவிக்கும்.
    கவிதைப் போட்டியில் நானும் கலந்துகொள்கிறேன். விரைவிலேயே கவிதை எழுதி தளத்தில் இட்டுவிட்டு உங்களுக்கு அனுப்புகிறேன்.

  5. சிறந்த முயற்சி என்பதை விட
    சிறந்த பணி என்பதே
    என் கருத்து.
    இதனால்
    சிறந்த படைப்பை
    சிறந்த படைப்பாளரை
    அடையாளப்படுத்த இடமுண்டு!
    இப்பணியில் இறங்கிய
    தங்களுக்கு
    எனது பாராட்டுகள்!
    வாழ்த்துகள்!!
    பா புனையும் மலைகளுடன்
    சிற்றெறும்பு – நான்
    போட்டியில் கலந்து கொண்டு
    தோல்வி தான் காண்பேன்…
    ஆயினும்,
    போட்டியில் கலந்து கொள்கிறேன்!

    பெயர்: யாழ்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)
    மின்னஞ்சல்: yarlpavanan@hotmail.com
    வலைப் பூ: http://eluththugal.blogspot.com/

  6. கவிஞர்களை ஊக்குவிக்கும் இந்த போட்டி பாராட்டப்படவேண்டியது தான், ஆனால் திரு. ரூபன் அவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழராக இருந்தால், இந்தப் பரிசுத் தொகையின் அளவு மிகவும் குறைவு என்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து. :))

  7. பிங்குபாக்: ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்

  8. வணக்கம் அண்ணா…

    நீண்ட நாள் கழித்து தங்கள் தளம் வந்துள்ளேன், இடையில் இணைய பிரச்சனை. அதான் இந்தப் பக்கம் வர முடியல…

    மிக்க மகிழ்ச்சி, தங்கள் போட்டி வெற்றியடைய வாழ்த்துகள்… நானும் கலந்துகொள்கிறேன், தங்கள் முயற்சி மிக்க பாராட்டத்தக்கது… பாராட்டுகள் அண்ணா…

  9. வணக்கம்,

    நல்ல அறிவிப்பு. கவிதை புனைபவர்க்கு ஊக்கம் தரும் உங்கள் இந்த அறிவிப்பு.

    வெற்றி பெறப்போகும் மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…

    நட்புடன்,
    நடராஜன் வி.

  10. அருமையான நல்ல ஊக்குவிப்பு முயற்சி சகோதரரே!
    போட்டி சிறப்புற அமையவும்,
    பங்கேற்கும் கவிஞர்களுக்கும், நடுவர்களும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    பகிர்வினுக்கு உங்களுக்கும் என் நன்றிகள்!

    • வணக்கம்
      அம்மா
      நீங்கள் நடுவராக உள்ளது எனக்கும் மாபெரும் சந்தோசமாக உள்ளது
      நான் பல தடவை பேசியபோது. நல்ல அறிவுரைகளையும் பல கருத்துக்களையும் சொல்லியமைக்கு நான் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். கவிதைப் போட்டி வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்தியமைக்கு மிக நன்றி அம்மா.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  11. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
    தீபாவளிச் சிறப்பு கவிதைப் போட்டி நடைபெற இருப்பதால் உங்கள் கவிதைகளை எழுதி அனுப்புங்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s