உச்சிவெயிலில் உடுத்த உடுப்புடன் குடும்பத்தை சுமக்க-வேண்டிய எம்மவர்கள் முதுகில் கூடையை-சுமக்கிறார்கள் நாணூறு(400)மீற்றர் -மலை உச்சியில் -ஏறி கொட்டும் மழையிலும் கொட்டும் பணியிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் ஒருசான் வயிற்றுக்கு உயிரையும் துறக்கும்-எம்மவர்கள் எம் தேயிலைத் -தொழிலாளிகள்
கால்களும் கனக்க கைகளும் வலிக்க தான் பெற்ற உறவுகளை அறுத்து விட்டு கதிரவன் ஒளிக்கீற்று பூமா தேவியின் மடியில்-தவள முன் அப்பா,அம்மா மச்சான் அத்தை மச்சினிச்சி-என்ற, உறவுகளை அளைத்தெடுத்து ஊர் விடிய முன் மலை-உச்சியில் சங்கமிக்கின்றான் அவர்கள் தான்-எம்மவர்கள் தேயிலைத் தோட்ட-தொழிலாளி,
முதுகில் கூடையும் இடப்பக்கத் தோழில் உணவுப் பொட்டனமும் வலப்பக்கத் தோழில் தாகத்தை – தீர்க்க தண்ணீரும் ஒருகையில் கத்தியும் மறு கையில்-தடியும் வேதனை தாங்கிய -சுமையுடன் தேயிலைக் கொழுந்தினை-பறிக்கிறார்கள் எம்மவர்கள்
கங்காணம் கணக்கப்பிள்ளை துரைமார்களின் துன்பம்ஒரு-பக்கம் குடும்பத்தின் வறுமைஒரு-பக்கம் இரண்டு சுமையையும் காலமென்னும் நீரோட்ட -வெள்ளத்தில் திசைமாறி ஆழ்கடலில் தத்தளிக்கும் படகு -போல எம்மவர் வாழ்கை-அலைமோதுகிறது,
தரணம் தப்பினால் மரணம் என்ற சுற்று வட்ட-விழிம்பில் பாம்புகளுக்கும்,அட்டைகளுக்கும்-இடையே தன் உயிரை ரனமாக்கி வியர்வையும் இரத்தத்தையும்-சிந்தி ஒருசான் வயிற்றுக்கு-உயிரை விட்ட எம்மவர்கள் எத்தனை பேர் எம்மவர்கள் பாதம் பட்ட தேயிலைத் தோட்டத்தில் சென்று பார்த்தாள் எம்மவர்களின் வரலாற்றை-சொல்லி விடும்