தொலைந்து போன ஜென்மங்களை
தேடி தேடி வாழ்கைதான்-தொலைந்து போனது,
இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி
மூச்சி தினர அழுதாலும்
தொலைந்து போன ஜென்மங்கள்
மீண்டும் வருவதில்லை
எம் ஜென்ம ஜென்ம உறவுகள்
எத்தனை நொடிப் பொழுதில் தொலைந்து-போனார்கள்
தொலைந்து போன ஜென்ம -உறவுகளை
தேடி தேடி நாள்தான் ஓடியது
எத்தனை உறவுகள் தன் உயிரை – ரணமாக்கி
கண்களில் சோக மழைபொழிகின்றார்கள்
இந்த ரணப் பொழுதை நினைக்கையில்
பார்த்திருக்கம் ஜென்ம உறவுகளும் – கண்ணீ வடிக்குதடா
கடல் அளவு கண்ணீ பொழிந்தாலும்
தொலைந்து போன – எம்
ஜென்ம உறவுகள் மீண்டும் வருவதில்லை
மனிதனாக மன்னில் பிறந்த நாம்
எத்தனை ஜென்ம உறவுகளுடன்
கூடி பளகியிருப்போம்
எம்மை விட்டுப் பிரியையில்
எம் மனசு எவ்வளவு -வேதனையடையும்???
அபிவிருத்தி அடைந்த நாடுகள்
என்ற போர்வையில்————
கொத்து குண்டுகளும்
இராசாயன அனுவாயுதங்களையும்
உற்பத்தி செய்து உயிப்பிக்கின்றான்
இந்த கொத்து குண்டுகளால
அவயங்களை இழந்த ஜென்மங்கள்-எத்தனை
ஜென்ம ஜென்மமாய் தொலைந்த கொன்டே -இருக்கின்றோம்
அந்த தொலைந்த போன ஜென்மங்கள்
மீண்டும் மீண்டும் மீண்டும் வருமா???????
எம்மை படைத்த ஒருவனுக்குகே,
எம்மை எடுப்பதற்கு உரிமையுண்டு
ஆனால் இராசயண அயுதங்களால்
மில்லியன் கணக்கில் உலகெங்கும்
எம் ஜென்ம ஜென்ம உறவுகள்
மாண்டுகொண்டதான் இருக்கின்றார்கள்
மனிதனாக வாழ்கின் காலத்தில்
மனிதனை மனிதன் மதித்து
அன்பாக பழகினால் போதும்
மாண்டு போன ஜென்ம உறவுகள்
மீண்டும் மலரப் போவதில்லை
இனி இருக்கின்ற எம் ஜென்ம
உறவுகளின் பக்கம்-பார்வையை
திருப்பினால் போதும்
நன்றி
அன்புடன்
ரூபன்
அருமையான கவிதை! உங்கள் வாழ்கையின் சரித்திரத்தை யாம் புரிதுகொள்ள முடிகிறது! மனிதனாய் பிறந்த பிறவியில் சோதனை என்பது புதிது அல்ல! பலரும் அனுபவிப்பதே! ஆனால் சிலருக்கு தான் அது அனுபவத்தை கொடுக்கின்றது! உங்களின் கருத்துப்படி எல்லோரிடமும் அன்பு செலுத்தி ஜென்ம உறவுகளை வளர்ப்போம்! 🙂
வணக்கம் உறவே
கருத்தாடல் இட்டமைக்கு முதற்கன் நன்றி தோழி……………..ஒவ்வெரு மனிதனும்
பாசம் என்ற வட்டத்துக்குள் வந்தாள் மனிதனை மனிதன் கட்டாயம் மதிப்பார்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-