தொடரை படிக்காதவர்கள் படிக்க முதலில் இங்கே சொடுக்கவும்
1.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-1
2.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-2
3.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-3
4.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-4
காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டாள்
என்ற உணர்வில் என் மனதில்
இசைவெள்ளம் புயலாக பொங்கியது
வீரியமாய் மண்ணில்
புதிதாய் முளைக்கும் வித்துப்போல்
கிளையை தாவி பிடிக்க படரும் கொடி போல
அவளும் என்னைத்தொடர்ந்தாள்
நானும் நகர்ந்து கொண்டே இருந்தேன்
அந்தியில் ஆதவன் வீடு புக
கடலோரம் கடற்கரை மண்ணிலே
அலையோடு விளையாடி
ஆர்ப்பரிக்கும் அலையோடு கை பிடித்து.
மணல் வீடு கட்டி விளையாடி
மகிழ்ந்த காலங்கள்.
தேனீகளும் பறவைளும் மதுவுண்டு கழிக்கும்
நம்மவூர் பூங்காவனச் சோலையிலே
துள்ளிக் குதித்து பட்டாம் பூச்சியை
துரத்தி துரத்தி பிடித்த காலங்கள்
உன்னோடு நான் உரச என்னோடு நீ உரச
உருண்டு புரண்ட ஞாபங்கள்
என் செஞ்சில் வந்தாட
உன் ஞாபகமே தினம் தினம் ஆர்ப்பரிக்கிது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடரும்……